விக்கிரவாண்டி அருகே கார் மோதி 3 பேர் உயிரிழப்பு :

விக்கிரவாண்டி அருகே கார் மோதி 3 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

விக்கிரவாண்டியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் மணிகண்டன் (23) என்பவர் நேற்று திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென சாலையில் குறுக்கே வந்த மொபட் மீது மோதிய கார் தறி கேட்டு ஓடியது.

அந்த கார் சர்வீஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த விக்கிரவாண்டியைச் சேர்ந்த தயாளன் (40), தயாளன் மனைவி சந்திரா(35) மற்றும் உண்ணாமலை மகன் செல்வம்(55) ஆகியோர் மீது மோதியதில் 3 பேரும் உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரவாண்டி போலீஸார் 3 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.

காரை ஓட்டிவந்த மணிகண்டனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in