பெண் காவலரிடம் நகை பறிப்பு :

பெண் காவலரிடம் நகை பறிப்பு :
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகே கொண்டைய கவுண்டனூரைச் சேர்ந்தவர் தீபலட்சுமி. கூம்பூர் காவல்நிலையத்தில் காவலராக பணிபுரிகிறார். நேற்று முன்தினம் பணி நிமித்தமாக திண்டுக்கல் டி.ஐ.ஜி. அலுவலகம் வந்துவிட்டு, இரவுப் பணி முடிந்து கொண்டைய கவுண்டனூர் திரும்பிக் கொண்டிருந்தார்.

தாடிக்கொம்பு அருகே சென்றபோது, அவரைப் பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், தீபலட்சுமி அணிந்திருந்த ஐந்து பவுன் தங்கச் சங்கிலியை பறிக்க முயன்றனர்.

தீபலட்சுமி சங்கிலியைப் பிடித்துக் கொண்டு போராடியதில் சங்கிலி அறுந்து ஒரு பகுதி மட்டும் திருடர்கள் கையில் சிக்கியது. அதை பறித்துக் கொண்டு தப்பினர். ஒரு பவுன் அளவிலான தங்கச் சங்கிலி பறிபோனது குறித்து தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in