Published : 05 Jul 2021 03:14 AM
Last Updated : 05 Jul 2021 03:14 AM

கமுதி அருகே - ஆட்டோ - லாரி மோதி சிறுவன் உயிரிழப்பு :

கமுதி அருகே ஆட்டோ மீது லாரி மோதியதில் 12 வயது சிறுவன் உயிரிழந்தான்.

விருதுநகர் மாவட்டம், வீரசோழனை சேர்ந்தவர் அப்துல்ஹமீது. இவர், தனது குடும்பத்தினருடன் அபிராமத்தில் இருந்து ஒரு ஆட்டோவில் கமுதியில் உள்ள தர்காவுக்கு நேற்று வந்துவிட்டு, மீண்டும் அபிராமத்துக்கு திரும்பிச் சென்றார். பசும்பொன் அருகே செல்லும்போது முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயற்சித்தபோது லாரியின் பின்பகுதியில் ஆட்டோ சிக்கி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோ ஓட்டுநர் அருகே உட்கார்ந்திருந்த அப்துல்ஹமீதுவின் மகன் பஷீர் அகம்மது (12) படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநரான அபிராமத்தைச் சேர்ந்த ஜெகன்(18) என்பவரை கைது செய்து கமுதி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x