Published : 04 Jul 2021 03:13 AM
Last Updated : 04 Jul 2021 03:13 AM

குன்னத்தூர் அருகே பாம்பு தீண்டிஒருவர் உயிரிழப்பு :

குன்னத்தூர் அருகே வெங்கமேடு இச்சித்தோட்டத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (47). இவர், தனது கோழிப்பண்ணை அருகே நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த பாம்பு அவரை தீண்டியுள்ளது. அலறல் சத்தம் கேட்டு, அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக குன்னத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x