Published : 04 Jul 2021 03:13 AM
Last Updated : 04 Jul 2021 03:13 AM

வெடிகுண்டுகள் வீசி ரவுடிகள் மோதல் விவகாரம்: 2 பேர் கைது :

வெடிகுண்டுகள் வீசி ரவுடிகள் மோதிய விவகாரத்தில் கண்டமங் கலம் அருகே 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி- கடலூர் எல்லையில் கடந்த 30-ம் தேதி இரு ரவுடி கோஷ்டிகளுக்கு இடையே நடை பெற்ற மோதலில் வெடிகுண்டுகள் வீசியும் கத்தியாலும் இருபிரிவினர் தாக்கி கொண்டனர். இதையடுத்து புதுச்சேரி மாநில எல்லையை ஒட்டிய விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கோட்டக்குப்பம், ஆரோ வில், கண்டமங்கலம் மற்றும் வளவனூர் காவல் நிலையை பகுதிகளில் தலைமறைவாக உள்ள ரவுடி களை பிடிக்க எஸ்பி நாதா உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கண்டமங்கலம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது கடலூர் வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடைய புதுச்சேரி விநாயகமூர்த்தி மற் றும் அவரது கூட்டாளியான வெள்ளாங்குப்பம்பாக்கம் கிராமத் தைச் சேர்ந்த அறிவழகன் ஆகியோரை தனிப்படை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் பல்வேறு கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x