தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை :

தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை :
Updated on
1 min read

திண்டிவனம் அருகே மொளசூர்கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன் மகன் ராமசந்திரன் (50) . இவர் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். தன் சொந்த ஊரைச் சேர்ந்த 4 பேருக்கு கடனாக ரூ. 4 லட்சம் கொடுத்துள்ளார்.

கரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பி இவர் கடன் வாங்கியவர்களிடம் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். பணம் வாங்கியவர்கள் பணத்தை கொடுக்காமல் இவரைஅநாகரீகமாக பேசி அவமானப் படுத்தியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த ராமசந்திரன் நேற்று முன்தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கிளியனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in