விபத்தில் ஆட்டோவில் பயணித்த 3 பேர் உயிரிழப்பு :

விபத்தில் ஆட்டோவில் பயணித்த 3 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த மணி கண்டன் (34), கண்ணன் (45), ராஜேந்திரன் (40) ஆகியோர் நேற்று கள்ளக்குறிச்சியில் இருந்து சங்கராபுரம் நோக்கி ஆட்டோவில் பயணித்துள்ளனர்.

ஆலத்தூர் இந்தியன் வங்கி அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னால் சிமெண்ட் மூட்டைகளுடன் சென்ற லாரியை ஆட்டோ கடந்து செல்ல முயன்றது. அப்போது ஆட்டோ நிலை தடுமாறி லாரியின் முன் பக்க சக்கரத்தில் சிக்கி விபத்துக்குள்ளானது. இதில்ஆட்டோவில் பயணித்த மணிகண் டன் ,கண்ணன், ராஜேந்திரன் ஆகியமூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி போலீஸார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண் டனர். கள்ளக்குறிச்சி- திருவண் ணாமலை சாலையில் தொடர்ந்து விபத்துகள் ஏற்படுவதால் சம்பவஇடத்திற்க்கு மாவட்ட காவல கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். கடந்த சில தினங்களுக்கு முன் இதே பகுதியில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து 4 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in