Published : 01 Jul 2021 03:17 AM
Last Updated : 01 Jul 2021 03:17 AM

மருத்துவக் கழிவுகளை - திறந்த வெளியில் கொட்டினால் கடும் நடவடிக்கை : தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகளின் படி, மருத்துவமனைகளில் உருவாகும் மருத்துவக் கழிவுகளை முறையாக பிரித்து, சேமித்து, பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் சுத்திகரிப்பு செய்வதற்காக ஒப்படைக்க வேண்டும். தொற்று ஏற்படுத்தக் கூடிய மருத்துவக் கழிவுகளை 48 மணி நேரத்துக்கு மேலாக சேமித்தல் கூடாது.

இருப்பினும், மருத்துவக் கழிவுகளை சாலைகள், ஆற்றங்கரைகள், நீர் நிலைகள் மற்றும் ஒதுக்குப்புறமான பகுதிகளில் சட்டவிரோதமாக கொட்டுவது தொடர்பாக பல்வேறு புகார்கள் பெறப்படுகின்றன.

தற்போது நிலவிவரும் கரோனாதொற்று சூழலில், மருத்துவக்கழிவுகளை முறையில்லாமல் திறந்த வெளியில் கொட்டுவது, பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து மருத்துவமனைகள், கரோனா பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்கள், மருத்துவக் கழிவுகளை முறையாக பிரித்து, சேமித்து அந்தந்தபகுதிகளில் மாசு கட்டுப்பாடுவாரியத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள பொது மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிலையங்களிடம் மட்டுமே ஒப்படைக்க வேண்டும்.

விதிகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x