‘வீடு, வீடாக தடுப்பூசி செலுத்தும் திட்டம்’ :

‘வீடு, வீடாக தடுப்பூசி செலுத்தும் திட்டம்’ :
Updated on
1 min read

கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கூடலூர் நகராட்சி மார்க்கெட்டுகள் நேற்றுமுதல் திறக்கப்பட்டன. சுழற்சி முறையில் கடைகள் திறக் கப்பட்டன. இதற்காக மளிகை, பலசரக்கு, இறைச்சிக் கடைகள் முன்பு ஏ, பி என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இந்த கடைகள், ஒருநாள்விட்டு ஒருநாள் திறக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் கூட்டம் குறைய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும் போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் கரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ளது. மாவட்டத்தில் கரோனா தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in