Published : 30 Jun 2021 03:15 AM
Last Updated : 30 Jun 2021 03:15 AM

மாயமான நான்கு மீனவர்கள் கரை சேர்ந்தனர் :

கீழக்கரை அருகே கடலுக்கு மீன் பிடிக்கச் சென்று மாயமான 4 மீனவர்கள் உடைந்த நாட்டுப் படகை பிடித்து கரை திரும்பினர்.

கீழக்கரை அருகே பக்கீர் அப்பா தர்கா மீனவர்கள் முரு கேசன் (36), முத்துச்சாமி (50) மற்றும் 2 சிறுவர்கள் என 4 பேர் நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். முள்ளித்தீவு அருகே மீன்பிடித்தபோது கடல் சீற்றத்தால் படகு உடைந்து கவிழ்ந்தது. இதில் மீனவர்கள் தத்தளித்தனர். பின்னர் உடைந்த படகைப் பிடித்துக்கொண்டு 4 பேரும் உயிர்தப்பி நேற்று மதியம் புதுமடம் அருகே மணக் குடி கடற்கரைக்கு வந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x