Published : 29 Jun 2021 06:13 AM
Last Updated : 29 Jun 2021 06:13 AM
பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி மதுரை, திண்டுக் கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கம்யூ னிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரை மாவட்டம், சமயநல்லூரில் மார்க்சிஸ்ட் மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாநில செயற்குழு உறுப்பினர் மதுக் கூர் ராமலிங்கம், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய் ஆகியோர் பேசினர். இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்ணன், சிபிஐ (எம்எல்) பகத்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
யா.ஒத்தகடையில் நடந்த ஆர்ப் பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் தாலுகா செயலாளர் எம்.கலைச்செல்வன் தலைமை வகித்தார்.
திண்டுக்கல்
ராமநாதபுரம்
ராமநாதபுரம் அரண்மனை முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் முருகபூபதி தலைமை வகித்தார். சிஐடியூ தொழிற்சங்க நிர்வாகி குருவேல், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் முகம்மது யாசின் கலந்து கொண்டனர்.ராமேசுவரம் தபால் நிலையம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா துணை செயலாளர் ப.வடகொரியா தலைமை வகித்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம், ராஜபாளை யத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் ரவி தலைமை வகித்தார். செட்டியார்பட்டியில் நடந்த ஆர் பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் லிங்கம் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் குருசாமி, ராமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT