சிவகங்கையில் கருப்பு பூஞ்சையால் பெண் உயிரிழப்பு :

சிவகங்கையில் கருப்பு பூஞ்சையால் பெண் உயிரிழப்பு :
Updated on
1 min read

திருச்சி மாவட்டம், துவரங் குறிச்சியைச் சேர்ந்தவர் உம்மாசலிமா (65). கருப்பு பூஞ்சை நோயால் அவதிப்பட்ட அவர், ஜூன் 18-ம் தேதி சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘இறந்தவருக்கு பல இணை நோய்கள் இருந்தன,’ என்றனர்.

சிவகங்கை அரசு மருத்துவமனையில் இதுவரை கருப்பு பூஞ்சையால் 16 பேர் அனுமதிக்கப்பட்டு, சிலர் குணமடைந்து சென்ற நிலையில் 8 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in