700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் :

700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் :
Updated on
1 min read

நாகர்கோவில்: விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் அலுவலர்கள் களியக்காவிளை அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அவ்வழியாக வந்த காரில், 700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது. அவற்றை கேரளாவுக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. கார் மற்றும் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in