Published : 29 Jun 2021 06:14 AM
Last Updated : 29 Jun 2021 06:14 AM

புதிதாக 189 பேருக்கு கரோனா தொற்று :

வேலூர்

வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் நேற்று புதிதாக 189 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால் மொத்த பாதிப்பு 46,797-ஆக அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது 445 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. 73 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தி.மலை மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கரோனாதொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. இதனால், கரோனாதொற்றுக்கு பாதிக்கப்பட்ட வர்கள் எண்ணிக்கை 49,013-ஆக உயர்ந்துள்ளது. 47,386 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x