புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி : விவசாயத் தொழிலாளர் ஆர்ப்பாட்டம் :

புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி : விவசாயத் தொழிலாளர் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் என்.பெருமாள் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பாலுபாரதி, மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் நிக்கோலஸ், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க நிர்வாகி பாண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பழநியில் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ‘விவசாயத்தைப் பாதுகாப்போம், ஜனநாயகத்தை காப்போம்’ என்ற பெயரில் ரவுண்டானா அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் அருள்செல்வன் தலைமை வகித்தார். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in