பெண்ணிடம்  நகை பறிப்பு :

பெண்ணிடம் நகை பறிப்பு :

Published on

அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் அருகேயுள்ள காவனூரைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி(47). இவர், நேற்று காத்தான்குடிகாடு பகுதியில் உள்ள எண்ணெய் மில்லுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாக னத்தில் வந்த ஒரு இளைஞர், தமிழ்ச்செல்வி அணிந்திருந்த ஐந்தரைப் பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் கயர்லாபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in