தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் :

தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் :
Updated on
1 min read

தூய்மைப் பணியாளர்களுக்கு இரண்டு மாத ஊதிய நிலுவையை வழங்க வலியுறுத்தி, திருப்பூர் மாநகராட்சி முன்பு உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் (சிஐடியு) நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தூய்மைப் பணியாளர்கள், வாகன ஓட்டுநர் உட்பட 1, 500-க்கும்மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

ஏப்ரல், மே மாதத்துக்கான ஊதியம் ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை. தொடர்ந்து பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.510 ஊதியம் வழங்க வேண்டுமென ஆட்சியர் உத்தரவிட்டும் அமல்படுத்தப்படவில்லை. மேலும், அரசாணை 256-ன் படி தூய்மைப் பணியாளர்களுக்கு, மூன்று மாத ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இதேபோல, உடனடியாக 2 மாத கால நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டுமென வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், வரும் 28-ம் தேதிக்குள் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காணப்படும் என, மாநகராட்சி நிர்வாகத்தினர் உறுதி அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in