Published : 26 Jun 2021 03:12 AM
Last Updated : 26 Jun 2021 03:12 AM

ரெட்டியார்சத்திரம் : ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் :

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம், ரெட்டியார்சத்திரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

ஒன்றியத் தலைவர் சிவகுரு சாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் ராஜேஸ்வரி வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி, சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், ஆத்தூர் தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தும், தார்ச் சாலை அமைத்தல், அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்துதல் உள்ளி்ட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x