Published : 26 Jun 2021 03:14 AM
Last Updated : 26 Jun 2021 03:14 AM
சாத்தான்குளம் தைக்கா தெருவைச் சேர்ந்தவர் மார்ட்டின் (45). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மைதீன் மீரான் (33) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் பிரச்சினை ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த 10-ம் தேதி இரவு மார்ட்டின் சாத்தான்குளம் பள்ளிவாசல் அருகே மோட்டார் சைக்கிளில் வந்தபோது கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 8 பேரை போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய சாத்தான்குளம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்த மகதூம் மகன் அப்துல்காதரை (27) இட்டமொழி பேருந்து நிறுத்தம் அருகே டிஎஸ்பி காட்வின் ஜெகதீஸ்குமார் தலைமையிலான போலீஸார் நேற்று கைது செய்தனர். மகதூம், செந்தில் ஆகியோரை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT