வீட்டில் அலங்கார செடி போல கஞ்சா செடி வளர்த்தவர் கைது :

வீட்டில் அலங்கார செடி போல கஞ்சா செடி வளர்த்தவர் கைது :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள குழுமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வீரமணி(27). இவர், தனது வீட்டின் பின்புறம் ஒரு கஞ்சா செடியை அலங்காரச் செடி போல, வளர்த்து வந்துள்ளார். இந்தச் செடி 5 அடி உயரத்துக்கு வளர்ந்துள்ளது.

இந்நிலையில், இந்த கஞ்சா செடி குறித்து செந்துறை போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் கஞ்சா செடியைக் கைப்பற்றியதுடன், செடியை வளர்த்த வீரமணியை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in