Published : 25 Jun 2021 03:15 AM
Last Updated : 25 Jun 2021 03:15 AM

சீல் வைக்கப்பட்டிருந்த கடைகளை திறந்ததால் அபராதம் விதிப்பு :

கரூர்

கரூர் நகராட்சி தெற்கு மற்றும் வடக்கு முருகநாதபுரம் தெருவில் எலெக்ட்ரானிக்ஸ், செல்போன் உதிரிபாக விற்பனை மற்றும் பழுது நீக்குதல், பிளாஸ்டிக் பொருட்கள், பேன்ஸி ஸ்டோர், விளையாட்டுப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. இங்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கரோனா ஊரடங்கு விதிகளை மீறி திறந்திருந்ததாக 50-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்நிலையில், சீல் வைக் கப்பட்ட சில கடைகள் நேற்று திறக்கப்பட்டு, வியாபாரம் நடைபெற்றது. இதையறிந்த நகராட்சி அலுவலர்கள் அங்கு சென்று, திறக்கப்பட்டிருந்த கடைகளை மீண்டும் பூட்டி, அபராதம் விதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x