Published : 23 Jun 2021 03:13 AM
Last Updated : 23 Jun 2021 03:13 AM
வாணியம்பாடியில் தனியார் நிதியுதவி பள்ளியின் ஆசிரியர் வீட்டில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
வாணியம்பாடி ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர் வசீம்அக்ரம் (44). இவர், வாணியம்பாடியில் உள்ள தனியார் நிதியுதவி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், திருப்பத்தூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு வசீம்அக்ரம் குடும்பத்தாருடன் நேற்று முன்தினம் சென்றார்.
நேற்று மாலை 5 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ.10 ஆயிரம் பணம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது. பின்வாசல் வழியாக உள்ளே வந்த மர்ம நபர்கள் பணம் மற்றும் நகையை திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து வாணியம்பாடி நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT