Published : 22 Jun 2021 03:12 AM
Last Updated : 22 Jun 2021 03:12 AM

ரூ. 8.29 லட்சம் திருடிய மூவர் கைது :

திருப்பூர்

திருப்பூர் கோல்டன் நகர் ஐஸ்வர்யா நகரை சேர்ந்தவர் மாயாண்டி (47). கடந்த 14-ம் தேதிவீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன், தனக்கு சொந்தமான குடோனுக்கு சென்றிருந்தார். மதியம் வீடு திரும்பியபோது, பீரோவில் இருந்த, ரூ. 8 லட்சத்து 29 ஆயிரம் திருட்டுபோனது தெரியவந்தது.

கதவின் பூட்டு உடைக்கப்படாத நிலையில், உள்ளே இருந்தபணம் மட்டும் மாயமானது குழப்பத்தை ஏற்படுத்தியது. புகாரின் பேரில், வடக்கு போலீஸார் விசாரித்து, அதே பகுதியை சேர்ந்த 3 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், அவர்கள் திருப்பூர் கோல்டன் நகர் ஜோதிநகரை சேர்ந்த அருண்குமார் (21), பவானி நகரை சேர்ந்த அபிஷேக் (21) மற்றும் சூர்யா (21) என்பதும், மாயாண்டியின் வீட்டுக்கதவை, லாவகமாக திறந்து, திருட்டில்ஈடுபட்டதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து ரூ. 5 ஆயிரத்தை மட்டுமே போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக மேலும் இருவரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x