Regional02
82 ஏக்கர் நிலத்துக்கான பட்டா ரத்து எதிரொலி - 33 கிராமங்களை ஆய்வு செய்த குழு அறிக்கை சமர்ப்பிப்பு :
காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூர் அருகே உள்ள பீமன்தாங்கல் கிராமத்தில் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை 6 வழிச்சாலையாக மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிக்கான நில எடுப்பின்போது தனியார்நிலங்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.
ஆனால் அரசுக் கணக்கில் அனாதீனம் உள்ளிட்ட கணக்கில் உள்ள 7.5 ஏக்கர் நிலங்களை அதிகாரிகள் உதவியுடன் தனி நபர்கள் சிலர், பட்டா பெற்று ரூ.39 கோடி அளவுக்கு முறைகேடாக இழப்பீடு பெற்றுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.
6 பேர் குழு அமைப்பு
