25 டன் ரேஷன் அரிசி பறிமுதல் 14 பேர் கைது :

25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்   14 பேர் கைது :
Updated on
1 min read

தமிழகத்தில் ரேஷன் அரிசியைசிலர், பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கிஅதனை கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு கடத்திச் சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக வந்த புகார்களின்பேரில் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குநர் ஆபாஷ்குமார் உத்தரவின்பேரில் சென்னை மண்டல எஸ்பி ஸ்டாலின், டிஎஸ்பி ஜான்சுந்தர் ஆகியோரின் மேற்பார்வையில் விழுப்புரம் இன்ஸ்பெக்டர் கல்பனா தலைமையிலான போலீஸார், கடந்த சில நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தீவிர ரோந்துப் பணி மற்றும் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

இதில் வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற 25 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும் இந்த அரிசி கடத்தலில் ஈடுபட்ட காஞ்சிபுரத்தை சேர்ந்த முரளி (38), மணிகண்டன் (28), கலீல்ரகுமான் (50), விழுப்புரத்தைச் சேர்ந்த ஷாகுல்அமீது (35), ஜாபர்சேட் (28), வேல்முருகன் (32) உள்ளிட்ட 14 பேரைபோலீஸார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத் தப்பட்ட ஒரு கண்டெய்னர் லாரி, ஒரு ஆட்டோ, 3 பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in