Published : 22 Jun 2021 03:12 AM
Last Updated : 22 Jun 2021 03:12 AM

கடலூர் மாவட்டத்தில் - கரோனாவுக்கு 7 பேர் உயிரிழப்பு :

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி

கடலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 189 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் 56,728 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் சிகிச்சையில் இருந்தவர்களில் நேற்று 7 பேர் உயிரிழந்தனர். இதுவரை 726 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 115 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 41,747 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 306பேர் குணமடைந்தனர். இதுவரையில் 40,228பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,195பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் நேற்று ஒருவர் உயிரிழந்தது உட்பட இதுவரை 324பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 147 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் 25,990 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 187 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x