திருப்புவனம் பாஜக நிர்வாகி குறித்து - முகநூலில் அவதூறு பரப்பியதாக இருவர் மீது போலீஸார் வழக்கு :

திருப்புவனம் பாஜக நிர்வாகி குறித்து -  முகநூலில் அவதூறு பரப்பியதாக இருவர் மீது போலீஸார் வழக்கு :
Updated on
1 min read

திருப்புவனம் பாஜக ஒன்றியத் தலைவர் குறித்து முகநூலில் அவதூறு பரப்பியதாக இருவர் மீது மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே புலியூரைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவர் பாஜக திருப்புவனம் ஒன்றியத் தலைவராக உள்ளார். இந்நிலையில், திருப்புவனம் டி.கொட்டத்தைச் சேர்ந்த ரவிராஜன், காரைக்குடி அருகே இலுப்பக்குடியைச் சேர்ந்த நாராயணன் ஆகியோர் முகநூலில் பாலமுருகன் குறித்து அவதூறு கருத்துகளை பரப்பியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தட்டிக்கேட்ட பாலமுருகனை, ரவிராஜன், நாராயணன் ஆகியோர் தரக்குறைவாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து பாலமுருகன் புகாரின் பேரில் ரவிராஜன், நாராயணன் மீது சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ரவிராஜன், நாராயணன் ஆகியோர் பாலமுருகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in