வில்லிபுத்தூர் அருகே இளைஞர் கொலை :

வில்லிபுத்தூர் அருகே இளைஞர் கொலை :
Updated on
1 min read

வில்லிபுத்தூர் அருகே உள்ள கூமாப்பட்டி அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமகாலிங்கம் (22). இவர் நேற்று முன்தினம் இரவு ராமசாமியாபுரம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தாமரை என்பவர் முன்விரோதம் காரணமாக சுந்தர மகாலிங்கத்தை அரிவாளால் வெட்டியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

எஸ்பி மனோகரன் மற்றும் வத்திராயிருப்பு போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி தாமரையைக் கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in