மின்னல் தாக்கி முதியவர் உயிரிழப்பு :

மின்னல் தாக்கி  முதியவர் உயிரிழப்பு :
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே புதுவளவு கிராமத்தைச் சேர்ந்தவர் சேவுகன் (70). இவர், திருப்பத்தூர் பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

நேற்று மாலை ஆடுகளை மேய்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். செட்டிக்கண்மாய் என்ற இடத்தில் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். கண்டவராயன்பட்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.

சவுதியில் மகன் மரணம்

சேவுகனின் மகன் சின்னத்தம்பி (43) சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்தார். அவர் நேற்று முன்தினம் வேலை செய்த இடத்தில் உயிரிழந்தார். அவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர குடும்பத்தினர் முயற்சித்து வந்த நிலையில், தந்தையும் நேற்று உயிரிழந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in