Published : 21 Jun 2021 03:16 AM
Last Updated : 21 Jun 2021 03:16 AM

தொழிலாளியை தாக்கிய இருவர் கைது :

திருவண்ணாமலை: ஆரணி அருகே மணல் கொள்ளை குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததாக கூறி, தொழிலாளியை தாக்கிய இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த காமக்கூர், வம்பலூர் உள்ளிட்ட கிராமங்களில் மணல் கொள்ளை நடைபெறுவது குறித்து களம்பூர் காவல் நிலையத்துக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில், காவல்துறையினர் சோதனை நடத்தி 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர். மேலும், சிலரை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், மணல் கடத்தல் குறித்து தகவல் கொடுத்ததாக கூறி, பார்வதி அகரம் கிராமத்தில் வசிக்கும் திருமுருகனை, மணல் கடத்தல் வழக்கில் தலைமறைவாக உள்ள காமக்கூர் கிராமத்தில் வசிக்கும் பாபு(30) மற்றும் வினோத்(25) ஆகியோர் தாக்கியுள்ளனர். இது குறித்து திருமுருகன் அளித்த புகாரின் பேரில் களம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாபு மற்றும் வினோத்தை நேற்று முன் தினம் கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x