Published : 21 Jun 2021 03:17 AM
Last Updated : 21 Jun 2021 03:17 AM
அரக்கோணம்: தமிழகத்தில் கரோனா தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் மதுபானக்கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், அரக்கோணம் மார்க்கெட் பகுதியில் உள்ள அரசு டாஸ்மாக் மதுபானக்கடையில் மாலை 5 மணிக்கு பிறகும் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வட்டாட்சியர் அலுவலகத்துக்கு புகார் சென்றது. அதன்பேரில், வட்டாட்சியர் பழனிராஜன் தலைமை யிலான வருவாய்த் துறையினர் மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று ஆய்வு நடத்தியபோது, அங்கு அரசு உத்தரவை மீறி மாலை 5 மணிக்கு பிறகும் மதுபாட்டில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. இதையடுத்து, விதிமுறைகளை மீறிய டாஸ்மாக் மதுபான மேற்பார்வையாளர் கமலக்கண்ணனுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த் துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT