Published : 21 Jun 2021 03:17 AM
Last Updated : 21 Jun 2021 03:17 AM

வாணியம்பாடியில் கரோனா தொற்று கண்டறியும் முகாம் : டிஆர்ஓ தங்கைய்யா பாண்டியன் நேரில் ஆய்வு

வாணியம்பாடி நகராட்சி பகுதிகளில் கரோனா தொற்று கண்டறியும் பணிகளை மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் வீடு, வீடாக சென்று கரோனா தொற்று கண்டறியும் முகாமை நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டிருந்தார்.

இதற்காக, ஒவ்வொரு நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளுக்கு 100 வீடுகளுக்கு ஒரு நபர் என்ற கணக்கில் செவிலியர், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், வருவாய்த் துறையினர், ஊரக வளர்ச்சித்துறையினர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இக்குழுவினர் அவர்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதி களில் வீடு, வீடாக சென்று காய்ச்சல், சளி, இருமல், உடல் சோர்வுகளால் யாராவது பாதிக்கப்பட்டுள்ளார்களா? கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எத்தனை பேர்? தடுப்பூசி போடாதவர்கள் யார் ? 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்கள் எத்தனை பேர் உள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நபர்களின் தற்போதை நிலை என்ன? அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பது குறித்த ஆய்வுப்பணிகளில் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் கரோனா தொற்று கண்டறியும் முகாம் நேற்று காலை தொடங்கியது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வீடு, வீடாக சென்ற சுகாதார பணியாளர்கள் பொதுமக்களுக்கு காய்ச்சல் அறிகுறி, தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இப்பணிகளை. மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யா பாண்டியன் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி, நகராட்சி பொறியாளர் பாபு உட்பட பலர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x