Published : 21 Jun 2021 03:17 AM
Last Updated : 21 Jun 2021 03:17 AM

விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழப்பு :

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த உடையாமுத்தூர் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பரசுராமன் (45), ரவி (45). கட்டிட தொழிலாளிகள். இருவரும் நேற்று சிங்காரப்பேட்டையிலிருந்து திருப்பத்தூருக்கு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் அருகே வந்த போது எதிரே வந்த டேங்கர் லாரி ஒன்று இரு சக்கர வாகனம் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் ரவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த பரசுராமன் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து திருப்பத்தூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x