Published : 20 Jun 2021 03:14 AM
Last Updated : 20 Jun 2021 03:14 AM

கரோனா தடுப்பூசி ஓவியப்போட்டி :

புதுச்சேரி

புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி பள்ளிக்கல்வி துறை யின் மூலம் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி இணையதளத்தின் வழியாக நடத்த இருப்பதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த ஓவியப் போட்டி வரும் வாரத்தில் 'கரோனா தடுப்பூசி' என்ற தலைப்பில் நடைபெறும். விழிப்புணர்வு ஓவியத்தை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்து பங்கு பெறலாம். சிறந்த10 ஓவியங்களுக்கு பரிசளித்து அவ்வோவியங்களை விழிப்புணர்வு பிரசுரங்களாக பயன்படுத்த புதுச்சேரி அரசு முடிவெடுத்துள்ளது.

மாணவர்கள் தங்கள் ஓவியத்தை பதிவேற்றம் செய்ய இணையதள ‘லிங்க்’ பள்ளிகள் மூலம் மாணவர்களுக்கு அனுப் பப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x