Published : 20 Jun 2021 03:14 AM
Last Updated : 20 Jun 2021 03:14 AM

சசிகலாவை அதிமுகவில் அனுமதிக்கக் கூடாது : தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடம்பூரில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையில் நடைபெற்றது. வடக்கு மாவட்ட அவைத்தலைவர் என்.கே.பெருமாள், முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னப்பன், மோகன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சத்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கோவில்பட்டி சட்டப் பேரவை தொகுதியில் புதிய செவிலியர் பயிற்சி பள்ளி, கால்நடை ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும். கோவில்பட்டியில் உற்பத்தி யாகும் கடலைமிட்டாயை அங்கன்வாடி மற்றும் சத்துணவு திட்டத்தில் பயிலும் குழந்தைகளுக்கு வழங்க அரசு ஆவண செய்ய வேண்டும். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு, அரசியலில் இருந்து விலகுவதாக அறிக்கை விட்டு மறைமுகமாக அதிமுகவின் வெற்றிக்கு இடையூறாக செயல்பட்ட சசிகலாவையும், அவரை சார்ந்தவர்களையும் எக்காரணம் கொண்டும் அதிமுகவில் அனுமதிக்கக் கூடாது. அதிமுகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நகர செயலாளர் விஜய பாண்டியன், இளைஞரணி இணைச் செய லாளர் சீனிராஜ், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், அய்யாத்துரை பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x