Published : 20 Jun 2021 03:14 AM
Last Updated : 20 Jun 2021 03:14 AM

கோயில் பூசாரிகளுக்கு நிவாரண உதவி வழங்கல் :

புதுக்கோட்டை/ அரியலூர்/ நாகப்பட்டினம்/ மயிலாடுதுறை

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால பூஜை நடைபெறும் கோயில்களில் சம்பளம் இல்லாமல் பணியாற்றும் பூசாரிகள், பட்டாச்சாரியார்கள், அர்ச்சகர்களுக்கு தமிழக அரசின் நிவாரணத் தொகை ரூ.4,000 மற்றும் 10 கிலோ அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

அதன்படி, புதுக்கோட்டை திருவப் பூர் முத்துமாரியம்மன் கோயிலில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பூசாரிகள், அர்ச்சகர்களுக்கு நிவாரணம், மளிகைப் பொருட்களை மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி வழங்கினார். நிகழ்ச்சியில், எம்எல்ஏ வை.முத்துராஜா, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் சுரேஷ், கோட்டாட்சியர் அபிநயா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்டத்தில் 331 பேருக்கு நிவாரண ​உதவி வழங்கப்பட உள்ளது.

அரியலூரை அடுத்த கல்லங்குறிச்சி கலியுக வரதராச பெருமாள் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்துகொண்டு பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பிற பணியாளர்கள் என 123 பேருக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன், அறநிலையத் துறை இணை ஆணையர் கே.பி.அசோக்குமார், கோட்டாட்சியர் ஏழுமலை, மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் பொ.சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நாகை நீலாயதாட்சி அம்மன் கோயி லில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 218 பயனாளிகளுக்கு ரூ.8.72 லட்சம் மதிப்புள்ள நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வழங்கினார். நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் நாகை மாலி, முகமது ஷா நவாஸ், அறநிலையத் துறை இணை ஆணையர் தென்னரசு, உதவி ஆணையர் ராணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில், 168 கோயில்களில் பணியாற்றும் 170 பயனாளிகளுக்கு ஆட்சியர் லலிதா நிவாரண உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் பன்னீர்செல்வம், நிவேதா முருகன், ராஜகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், கோட்டாட் சியர் பாலாஜி, அறநிலையத் துறை உதவி ஆணையர் இளையராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x