Published : 20 Jun 2021 03:15 AM
Last Updated : 20 Jun 2021 03:15 AM

வேலூர் அருகே பெண்ணிடம் : 4 பவுன் தங்க சங்கிலி பறிப்பு :

வேலூர் அலமேலுமங்காபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி (55). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியேநின்றுக்கொண்டிருந்தார். அப்போது, அவ் வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் ஜோதியிடம் முகவரி கேட்பது போல் பேசியுள்ளனர்.

பின்னர், ஜோதியின் கவனத்தை திசை திருப்பியவர்கள் அவரது கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதனால், அதிர்ச்சி அடைந்த ஜோதி கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றவர்களை துரத்திச் சென்றனர். ஆனால், அவர்களை பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்த தகவலின்பேரில் சத்துவாச்சாரி காவல் துறையினர் தப்பிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x