Published : 20 Jun 2021 03:15 AM
Last Updated : 20 Jun 2021 03:15 AM

ஒரே நாளில் 310 பேருக்கு கரோனா தொற்று உறுதி :

வேலூர், திருப்பத்தூர் மற்றும் தி.மலை மாவட்டங்களில் 310 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக 51 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதியானது. மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வரும் நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 500-க்கும் கீழ் குறைந்துள்ளது. தமிழகத்திலேயே வேலூர் மாவட்டத்தில் தான் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது.

அதேபோல், திருப்பத்தூர் மாவட்டத்தில் புதிதாக 87 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. மருத்துவமனைகளில் இருந்து 121 பேர் சிகிச்சையில் குண மடைந்து வீடு திரும்பிய நிலையில் 628 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 172 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,491-ஆக உயர்ந்துள்ளது. 45,594 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 1,342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x