கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்த எம்எல்ஏ :

கால்நடை மருத்துவமனையை திறந்து வைத்த எம்எல்ஏ :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டம் திருப்பெயர் கிராமத்தில் கால்நடை கிளை மருத்துவமனை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. மருத்துவமனையை பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் திறந்து வைத்து, கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

இம்முகாமில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்குதல், மலட்டுத்தன்மை போக்குதல், மடிவீக்கம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கான சிகிச்சை மற்றும் கால்நடைகள் ஆரோக்கியமாக இருப்பதற்கான மாத்திரைகள், சத்துமாவு ஆகியவை வழங்கப்பட்டன.

மேலும், இப்பகுதியில் உள்ள போலி கால் நடை மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு எம்எல்ஏ அறிவுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in