கருப்பு பட்டை அணிந்து பணியாற்றிய மருத்துவர்கள் :

கருப்பு பட்டை அணிந்து  பணியாற்றிய மருத்துவர்கள் :
Updated on
1 min read

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மருத்துவர்கள் மீது நடைபெறும் தாக்குதல் சம்பவங்களைக் கண்டித்தும், கரோனா பேரிடரில் உயிரை பணயம் வைத்து பணியாற்றும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் மருத்துவர்கள் நேற்று ஒருநாள் கருப்புப் பட்டை அணிந்து அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 30 தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கருப்பு பட்டை அணிந்து நேற்று பணியில் ஈடுபட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in