விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியராக ஜெ.மேகநாதரெட்டி பொறுப்பேற்பு :

விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியராக ஜெ.மேகநாதரெட்டி பொறுப்பேற்பு :

Published on

விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த இரா.கண் ணன் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை கூடுதல் ஆணை யராகப் பணியிட மாற்றம் செய்யப் பட்டார். பெருநகர சென்னை மாநகராட்சி (பணிகள்) துணை ஆணையராகப் பணியாற்றி வந்த ஜெ.மேகநாதரெட்டி விருதுநகர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப் பட்டார். இதையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சி யராக ஜெ.மேகநாதரெட்டி பொறுப் பேற்றுக்கொண்டார். அவரிடம் முந்தைய மாவட்ட ஆட்சியர் இரா.கண்ணன் பொறுப்புகளை ஒப்படைத்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி நட்டு வைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in