Published : 18 Jun 2021 03:17 AM
Last Updated : 18 Jun 2021 03:17 AM

பாமகவினர் ஆர்ப்பாட்டம் :

கரோனா பரவல் காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதைக் கண்டித்தும், டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பாமகவினர் நேற்று அவரவர் வீடு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டத்தை அடுத்த இலையூர் கிராமத்தில் பாமக மாநில துணை பொதுச் செயலாளர் டி.எம்.டி.திருமாவளவன், செந்துறை வன்னியர் சங்க கட்டிடம் முன்பு கட்சி நிர்வாகி சாமிதுரை, மீன்சுருட்டியை அடுத்த வாழைக்குட்டை கிராமத்தில் சமூக நீதிப் பேரவை மாநிலத் தலைவர் வழக்கறிஞர் பாலு, அரியலூர் சிட்டிபாபு தெருவில் மாநில துணைத் தலைவர் சின்னதுரை, கீழப்பழுவூரில் தொகுதிச் செயலாளர் தர்ம.பிரகாஷ் ஆகியோர் தலைமையில் பாமகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கரூர் தாந்தோணிமலையில் பாமக மாநில துணைச் செயலாளர் பாஸ்கரன் தலைமையில் நேற்று கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல, கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார், மாவட்டத் தலைவர் ராஜேஷ்கண்ணா, துணைச் செயலாளர் ராஜா, நகரச் செயலாளர் முருகேசன் உள்ளிட்டோர் அவரவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x