கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் மேலும் 8 பேர் உயிரிழப்பு :

கடலூர் மாவட்டத்தில் கரோனாவால் மேலும் 8 பேர் உயிரிழப்பு :
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் நேற்று 248 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை 55,674 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.நேற்று 347 பேர் குணமடைந்தனர். தற்போது 2,526 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 8 பேர் உயிரிழந்தனர். இதுவரை 699 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 182 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. நேற்று 390 பேர் குணமடைந்தனர். இதுவரையில் 37,920 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 2,799 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 3 பேர் உயிரிழந்தனர். இதுவரை 315 பேர் உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 155 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இதுவரை 25,165 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 327 பேர் உட்பட 22,794 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். 2,186 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒருவர் உட்பட 185 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in