Published : 17 Jun 2021 03:13 AM
Last Updated : 17 Jun 2021 03:13 AM
வில்லிபுத்தூர் அருகே அரசு பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தனது சொந்த பணத்தில் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கி வருகிறார் தலைமை ஆசிரியர் ஒருவர்.
வில்லிபுத்தூர் அருகே உள்ள படிக்காசுவைத்தான்பட்டி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி க.மகேஸ்வரி முன்னிலையில் நேற்று தொடங்கியது. அப்போது, பள்ளியில் முதல் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா பாட நூல்களுடன் தனது சொந்தப் பணத்தில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கினார்.
அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் கடந்த ஆண்டு இப்பள்ளியில் முதல் வகுப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு ஆன்ட்ராய்டு மொபைல் போன்களை தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அவர் கூறுகையில், இப்பள்ளிக்கு மிகுந்த ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களே சேருகிறார்கள். இவர்கள் தற்போது வாழ்வாதாரம் இழந்து கஷ்டமான சூழ்நிலையில் உள்ளார்கள். இந்த ஊக்கத் தொகை அவர்களுக்கு ஒரு உதவியாக இருக்கும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT