Published : 17 Jun 2021 03:13 AM
Last Updated : 17 Jun 2021 03:13 AM
மதுரை தியாகராசர் கலை, அறிவியல் கல்லூரி இணைப் பேராசிரியர்கள் பிரகாஷ், தர் மராஜ் ஆகியோர் ராயல் சொசைட்டி ஆப் கெமிஸ்ட்ரியின் (எப்ஆர்எஸ்சி) உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மதுரை தியாகராசர் கலை, அறிவியல் கல்லூரியில் வேதி யியல் துறை இணைப் பேராசிரியர் பிரகாஷ், 130-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். துறை சார்ந்த ஆய்வுகளின் வழியில் இரண்டு காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளார். இவரது வழிகாட்டுதலில் 14 பேர் பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர். இணைப் பேராசிரியர் தர்மராஜ், 60-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். உயிரி மருத்துவப் பயன்பாடு சார்ந்த இரு காப்புரிமைகள், மக்கும் தன்மை கொண்ட பாலிமர் பொருட்கள் சார்ந்த இரு காப்புரிமைகளும் பெற்றுள்ளார். இவரது வழிகாட்டுதலில் 14 பேர் பிஎச்டி பட்டம் பெற்றுள்ளனர்.
வேதியியல் துறையில் இந்த இருவரது பங்களிப்பை பெருமைப்படுத்தும் விதமாக லண்டனிலுள்ள வேதியியல் துறை சார்ந்த ஆராய்ச்சி திறனுக்கான ராயல் சொசைட்டி ஆப் கெமிஸ்ட்ரியின் (எப்ஆர்எஸ்சி) உறுப்பினர்களாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இருவருக்கும் கல்லூரிச் செய லாளர் ஹரி தியாகராசன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT