Published : 16 Jun 2021 03:13 AM
Last Updated : 16 Jun 2021 03:13 AM
புதுச்சேரி, காரைக்கால் ஜிப்மர் மையங்களில் மருத்துவ மாண வர்களுக்கான வகுப்புகள் ஜூலை 1 ம் தேதி தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து ஜிப்மர் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்:
புதுவையில் கரோனா பாதிப்பு குறைந்து வருவதால் புதுச்சேரி, காரைக்கால் ஜிப்மர் மையங்களில் பயிலும் எம்பிபிஎஸ் முதலாமாண்டு மாணவர்கள், பிஎஸ்சி நர்சிங் (முதல், இரண்டாம், மூன்றாமாண்டு) மாணவர்கள், பிஎஸ்சி துணைமருத்துவ படிப்புகள் (முதல்,இரண்டாமாண்டு) மாணவர்க ளுக்கு வரும் ஜூலை 1-ம் தேதி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. எம்பிபிஎஸ் இரண் டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவர்களுக்கு தனியாக அறிவிப்பு வெளியிடப்படும்.
மாணவர்கள் கரோனா தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்திக் கொள்ள வேண்டும். ஜிப்மர் வளாகத்தில் மாணவர்கள் வரும் 16-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல் தவணை தடுப்பூசியை எங்கு செலுத்தியிருந்தாலும், இரண்டாவது தவணை தடுப்பூசியை ஜிப்மர் வளாகத்தில் செலுத்திக் கொள்ளலாம்.
கரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள், கரோனா பரிசோதனைக்குப் பிறகே ஜிப்மர் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர். மற்ற மாணவர்கள் நேரடியாக அவ ரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட விடுதி அறைகளுக்குச் செல்லலாம்.
வகுப்புகளில் மாணவர்கள் கரோனா விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், வகுப்பு களிலிருந்து இடைநீக்கமும் செய்யப்படுவர் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
கரோனா பரிசோதனைக்குப் பிறகே ஜிப்மர் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT