திருப்பூர் மாவட்டத்துக்கு புதிதாக 16,600 டோஸ் தடுப்பூசி ஒதுக்கீடு :

திருப்பூர் மாவட்டத்துக்கு புதிதாக  16,600 டோஸ் தடுப்பூசி ஒதுக்கீடு :
Updated on
1 min read

திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்புகுறைந்து வருகிறது. இதற்கிடையே பலரும் தடுப்பூசி செலுத்தியதால், மாவட்டம் முழுவதும் தடுப்பூசி பற்றாக்குறையும் ஏற்பட்டது. சில இடங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்துக்கு மேலும் 16 ஆயிரத்து 600 டோஸ் தடுப்பூசி நேற்று வந்தது.

இதுதொடர்பாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, "தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்ட நிலையில், சுகாதாரத் துறை மூலமாக திருப்பூர் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட கோவாக்சின் 5,100, கோவிஷீல்டு 11, 500 என 16.600 டோஸ் தடுப்பூசி, சென்னையில் இருந்து வந்துள்ளது. இவை, அரசு மருத்துவ மனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்பட்டன" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in