சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து இருவர் படுகாயம் :

சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து இருவர் படுகாயம்  :
Updated on
1 min read

திருப்பூர் செவந்தாம் பாளையத்தில் இருந்து தாராபுரம் சாலையை நோக்கி பனியன் துணிகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் நேற்று மதியம் சென்று கொண்டிருந்தது. கோவில்வழி, பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்குமார் (26) என்பவர் ஓட்டி வந்துள்ளார்.

சந்திராபுரம், பண்ணாரி அம்மன் நகர் அருகே வேன் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அப்போது, அந்த வழியாக சந்திரபுரத்தில் இருந்து செவந்தாம்பாளையத்தை நோக்கி சென்ற இருசக்கர வாகனம் மீது வேன் கவிழ்ந்ததில், அதில் சென்ற இருவர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்துக்கு நல்லூர் போலீஸார் மற்றும் தெற்கு தீயணைப்பு வீரர்கள் சென்று காயமடைந்த இருவரையும் மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in