Published : 15 Jun 2021 03:13 AM
Last Updated : 15 Jun 2021 03:13 AM

செஞ்சி அருகே ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்டம் :

செஞ்சி அருகே சத்தியமங்கலத்தில் 500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மஸ்தான் வழங்கினார்.

விழுப்புரம்

செஞ்சி அருகே சத்தியமங்கலத்தில் கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை, மக்களுக்கு தனியார் சேவை அமைப்பு சார்பில் அரிசி, காய்கறிகள், கபசுர குடிநீர் பவுடர், சானிடைசர், முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் மஸ்தான் கலந்து கொண்டு 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செந்தமிழ்ச்செல்வன், திமுக ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், விஜயராகவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x