Published : 14 Jun 2021 03:12 AM
Last Updated : 14 Jun 2021 03:12 AM

கரோனா தொற்றாளர்கள் சிகிச்சை பெற உதகை, கூடலூரில் சித்த மருத்துவ மையங்கள் :

உதகை

நீலகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. முதல் அலையை விட 2-வது அலையில் இறப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கடந்தஓரிரு நாட்களாக பூரண குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.

உதகை, கூடலூர், குன்னூர்,கோத்தகிரி அரசு மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள் என 14 மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா போன்ற இந்திய மருத்துவ முறையில் மாவட்டங்கள் தோறும் சிகிச்சை மையங்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்திய மருத்துவம் மற்றும்ஹோமியோபதி துறை சார்பில் நீலகிரி மாவட்டத்தில் கரோனா சிகிச்சைக்காக 2 சித்த மருத்துவ மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. உதகை அருகே லவ்டேல் பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் 100 படுக்கைகளுடன் சிகிச்சை மையம் தயார்நிலையில் இருக்கிறது. கூடலூர் மார்னிங் ஸ்டார் பள்ளி சித்த மருத்துவ மையமாக செயல்பட தொடங்கியுள்ளது.

இதுகுறித்து மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செந்தில்குமார் கூறியதாவது: கூடலூரில் தொடங்கப்பட்ட சித்த மருத்துவ மையத்தில்கரோனா உறுதியான குழந்தைகள், பெண்களுக்கு என தனியாக சிகிச்சை அளிக்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அறிகுறி தென்பட்டவர்கள் சித்த மருத்துவ மையங்களில் அனுமதிக்கப்படுகிறார்கள். உதகை, கூடலூரில் மொத்தம் 200 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. அலோபதி டாக்டர்கள் அறிவுரையுடன் இந்திய மருத்துவமுறையான சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x